நாகப்பட்டினம்,பிப்.13: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறு த்தி நேற்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் மனோகரன், மதியரசன், ரஜினிகாந்த் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் 11 மாதம் என்பதற்கு பதிலாக 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், இறப்பு கால நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர் செல்வகுமாரி நன்றி கூறினார்.
