×

போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

செம்பனார்கோயில், பிப்.13: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சார்பில் மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக செம்பனார்கோயில் மேலமுக்கூட்டில் விழிப்புணர்வு தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

செம்பனார்கோயில், ஆக்கூர் ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்கள், கடைவீதிகள், பொதுமக்கள் கூடும் பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதி, பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கலைக்குழுக்களின் கிராமிய நடனம், நாடகங்கள், பாடல்கள் வாயிலாக பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : Sembanarkoil ,Mayiladuthurai district ,District Child Protection Unit ,Awareness Charity Organization ,Melamukkud ,Sembanarkoil… ,
× RELATED சிவராத்திரியை முன்னிட்டு தரிசனத்திற்கு வைக்கப்பட்ட லிங்கம்