வேதாரண்யம், பிப்.13: வேதாரண்யம் தாலுகா வாய்மேட்டில் நேற்றிரவு ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானது. நாகப்பட்டினம் மாவ ட்டம், வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் ஜவுளிகடை வைத்திருப்பவர் செல்வம் (57).இவரது ஜவுளிக்கடையில் 3வது தளத்தில் நேற்று இரவு மூன்றாவது தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தீ மளமளவென பரவி அங்கு வைக்கப்பட்டு இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானது. தகவல் அறிந்து வாய்மேடு, வேதாரண்யம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதுகுறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த தீவிபத்தை தொடர்ந்து வாய்மேடு பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
