தேனி, பிப். 11:தேசிய குடற்புழு நீக்க தினம், பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய இரண்டு தினங்கள் என 6 மாதத்திற்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றது. தேனி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் வாழும் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் இப்பருவத்தில் குடற்புழு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய குடற்புழு நீக்க முகாம் நேற்றும் (10ம் தேதி) விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 17ம் தேதியும் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது
