- பிறகு நான்
- தேனி மாவட்ட சேகரிப்பாளர் அலுவலகம்
- தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
- மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
- ராமலிங்கம்
தேனி, பிப். 11: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக, நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நிலஅளவைத் துறை சங்க மாவட்டதலைவர் வேல்முருகன், கிராம உதவியாளர் சங்க தலைவர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது, வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் நோக்கில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும், அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பனிப்பொழிவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பாக, தேனி மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
