×

செக்யூரிட்டிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி

 

இலுப்பூர், பிப்.10: தனியார் நிறுவனங்களில் திடீர் தீ விபத்து நேரிட்டால் அதிலிருந்து எவ்வாறு தொழிலாளர்களை காப்பாற்றி தீயை அணைப்பது குறித்து நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளி மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு, தீயணைப்புத் துறை சார்பில் பிப்ரவரி 9 முதல் 10 நாட்களுக்கு அடிப்படை தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி தீயணைப்பு நிலையங்களில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் தீ விபத்து காலங்களில் தீயை அணைக்கும் முறைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.

Tags : Ilupur ,fire department ,Tamil Nadu Fire and Rescue Services Department… ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்