கறம்பக்குடி,பிப்.10: கறம்பக்குடி அருகே சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் பறவை அமர்வு கம்பம் முறையால் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வயல் செயல்முறை விளக்க பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருவரங்குளம் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட காயம்பட்டி கிராமத்தில் வயல் பயிர்களில் பூச்சியின் தாக்கத்தை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் நோக்கில் பறவை அமர்வு கம்பம் முறை குறித்த வயல் செயல்முறை விளக்க காட்சி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் செய்து காட்டினர். இந்த செயல்முறை விளக்க காட்சியில் மாணவிகள் விவசாயிகளுக்கு பறவை அமர்வு கம்ப முறையும் முக்கியத்துவம் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
