ஆக்கூரில் பள்ளி முப்பெரும் விழா

 

செம்பனார்கோயில், பிப்.10: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் ஓரியண்டல் அரபி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளி செயலாளர் முகமது சாதிக் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். பள்ளித் தாளாளர் சலாஹுதீன் வரவேற்றார். திருச்சி கல்லூரி உதவி பேராசிரியர் அமிருதீன் ஹசனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Related Stories: