நாமக்கல், பிப்.18: நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தனியார் துறை நிறுவனங்களும்-தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 20ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவர்களை நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
