சீர்காழி, பிப்.10: சீர்காழியில் வரும் தேர்தலில் மக்கள் அச்சத்தைப் போக்க காவலர்கள் அணிவகுப்பு பேரணி நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
