சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் தேரோட்டம்

 

சீர்காழி, பிப். 10: சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் உலகப்புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.

Related Stories: