திண்டுக்கல், பிப். 10: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் அமைந்துள்ள சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன.
பின்னர் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு ராஜ அலங்காரம் செய்து தீபராதனைகள் நடந்தன. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் யுவராஜ் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
