சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்த பின் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், புதிய திட்டங்களை அறிவிப்பதிலும், தொடர்ந்து மோடி அரசு துரோகம் செய்து வருகிறது. கல்விக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய சுமார் 3000 கோடி ரூபாயை இதுவரையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யாமல் துரோகம் செய்து வருகிறது. மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இவை எல்லாம் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். தொழிலாளர்களுக்கான சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றி நான்கு கோடுகளாக தொகுத்து கோடிக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தி உள்ளது ஒன்றிய அரசு. இதை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 12ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இடங்களிலும் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி முழுமை யாக பங்கு கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
