துணை ஜனாதிபதி 22ம்தேதி மதுரை வருகை: ஏ.சி.சண்முகம் தகவல்

 

சென்னை: புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஏசிஎஸ் அறக்கட்டளையின் சார்பில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 10 கோடி செலவில், இந்தியாவின் விடுதலைக்கு உழைத்த கப்பலோட்டிய தமிழன் வஉசிக்கு மதுரையில் 110 அடியில் சிலை வைக்கப்பட உள்ளது. அதை ஒரு சுற்றுலா மையமாகவும் கட்டமைக்க முயற்சித்து வருகிறோம். சிலை 110 அடி, அதன் பீடம் 20 அடி என சிலை வடிவமைக்கப்பட உள்ளது.

இந்த சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார். இந்த சிலை அமைக்கும் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும். வேலைகள் முடிவடைந்த பிறகு நடைபெறும் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: