சென்னை: இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நாங்கள் பொருந்தக் கூடிய கூட்டணியா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
