கோவை: கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரும் குற்றவாளிகள் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தராஜன் அறிவித்துள்ளார்.கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன் (21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி (20) ஆகிய 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.
