வரியை செலுத்தாமல் ஏமாற்றியவர் ஊழலை ஒழிக்க வந்த போராளியா? விஜய்க்கு ஜவாஹிருல்லா சூடு

மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ சென்னையில் அளித்த பேட்டி: தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான தியாகமும் செய்யாமல், திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு இன்று அரசியல் களத்தில் இன்னொருவர் குதித்து இருக்கிறார். இவர்கள் எல்லாம் தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக போராடி இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

தமிழ்நாட்டில் நல்லாட்சியை வீழ்த்துவதற்காக பேசுவது எல்லாம் வெறும் தத்துவம் தான். ஊழலை ஒழிப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஊழலை ஒழிக்க வந்த போராளி என்று மேடை எல்லாம் பேசக்கூடியவர்களுக்கு உயர்நீதிமன்றம் ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. திரைப்படத்தில் மட்டும் தான் நடிக்கிறார் என்று பார்த்தால், நிஜ உலகிலும் நடிக்க தான் செய்கிறார்கள்.

மக்களை ஏமாற்றுவதற்காக வந்திருக்கக்கூடிய நடிகர்கள், ஒருபோதும் தமிழ்நாட்டை நிமிர வைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டை கபளீக்கரம் செய்து சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதற்கு பாஜ பார்க்கிறது. தமிழ்நாட்டினுடைய உரிமைகளை பறிக்க பார்க்கிறது. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய உரிமைகளை நசுக்கக்கூடிய பாஜ உடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: