ஓபிஎஸ் எங்க கூட தான் இருக்காரு… அண்ணாமலை ஒப்புதல்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சௌமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வந்து வழிபாடு செய்தார். பின்னர் அவர், அளித்த பேட்டி: நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது ஆதரவாக பேசிவிட்டு, இப்போது விமர்சிக்கிறீர்களே என்கிறீர்கள். புதிய கட்சி தொடங்கி புதிதாக வருபவர்களுக்கு ஆதரவளிப்பது வழக்கம் தான்.

ஆனால் அரசியல் நாகரிகத்தை எல்லோரும் கடக்க கூடாது. அவரது கட்சி கொள்கையை மக்கள் முன் வைக்கட்டும். நாங்கள் தே.ஜ. கூட்டணிக் கொள்கையை வைக்கிறோம். அதற்கு மக்கள் முடிவு செய்வார்கள். ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் முழுவதும் நாட்கள் இருக்கிறது. ஓபிஎஸ் எங்கக் கூடதான் இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

Related Stories: