மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை துணைத்தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ உளவுத்துறை துணைத்தலைவர் மீது நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
ரஷ்ய ராணுவ உளவுத்துறை துணைத்தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்சீவ் கடந்த 2001ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். நேற்று மாஸ்கோவில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்சீவ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அலெக்சீவ் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
