வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத ஆன்லைன் மருந்தகங்கள் மூலம் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். பலருக்கு கடும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு முகமை ஆபரேஷன் மெல்ட்டவுண் என்ற பெயரில் வெளிநாடுகளை சேர்ந்த சட்ட விரோத ஆன்லைன் மருந்தகங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் போலி மருந்து, மாத்திரைகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட இணையதள டொமைன்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் முடக்கப்பட்ட இணையதளங்கள் பெரும்பாலும் இந்தியாவை தளமாக கொண்ட சர்வதேச குற்றவியல் அமைப்புகளுடன் தொடர்புடையவை
