சீனாவுடன் நல்ல நட்பை பேணி வருகிறோம்: அதிபர் ஜி ஜின்பிங்குடன் டெலிபோனில் பேசிய டிரம்ப்

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்வுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது பல்வேறு உலக நிகழ்வுகள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து விவாதித்தனர். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்வுடன் ஒரு சிறந்த தொலைபேசி உரையாடலை இப்போதுதான் முடித்தேன்.

அதில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக வர்த்தகம், ராணுவம், ஏப்ரல் மாதத்தில் நான் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம், தைவான், ரஷ்யா-உக்ரைன் போர், ஈரானுடனான தற்போதைய நிலைமை, அமெரிக்காவிலிருந்து சீனா எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல், தற்போதைய பருவத்திற்கு சோயாபீன் எண்ணிக்கையை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது உள்பட கூடுதல் விவசாய பொருட்களை வாங்குவது குறித்து சீனாவின் பரிசீலனை, விமான இன்ஜின் விநியோகங்கள் மற்றும் பல பிற விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

அனைத்தும் மிகவும் நேர்மறையானவை. சீனாவுடனான உறவும், ஜி ஜின்பிங்வுடனான எனது தனிப்பட்ட உறவும் மிகவும் நல்ல ஒன்றாகும். அதை அப்படியே வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கிறோம். எனது அதிபர் பதவியின் அடுத்த 3 ஆண்டுகளில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்கள் குடியரசுடன் தொடர்புடைய பல நேர்மறையான முடிவுகள் அடையப்படும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: