- பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டி
- அரந்தாங்கி
- அறந்தாங்கி
- மெமிசல் போலீஸ்
- இன்ஸ்பெக்டர்
- மாலதி
- மெமிசல் பிரைவெட் மெட்ரிகுலேஷன் பள்ளி
- புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி, பிப்.5: அறந்தாங்கி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய கொடியை மீமிசல் காவல் ஆய்வாளர் மாலதி ஏற்றி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் மீமிசல் காவல் ஆய்வாளர் மாலதி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்பு அங்கே உள்ள முக்கியஸ்தர்கள் ஒலிம்பிக் கொடி மற்றும் சமாதான கொடியை ஏற்றி வைத்து ஆண்டு விழாவை துவக்கி வைத்தனர். முதலில் மாணவ, மாணவிகள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோபால பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், சத்திரப்பட்டினம் கிராம தலைவர், லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர், தற்பொழுது உள்ள தலைவர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் வெல்கம் டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். அனைவருக்கும் பள்ளி தாளாளர் ராமசாமி நன்றி கூறினார்.
