- Gandharvakottai
- தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை
- கன்னியாகுமாரி
- தூத்துக்குடி
- மதுரை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணி
கந்தர்வகோட்டை, பிப்.5: கந்தர்வகோட்டை பகுதி வழியாக தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்து, கார், வேன் கனரக வாகனங்கள் பயணித்து வருகின்றன.
இந்த சாலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான கழிப்பறை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கழிப்பறை போதிய பராமரிப்பின்றி சிதலமடைந்து தண்ணீர் வசதி இல்லாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் விரைந்து இந்த பகுதியில் உள்ள சாலையோர கழிப்பறைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
