×

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயிலில் பொது விருந்து

பொன்னமராவதி, பிப். 4: பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் இணைஆணையர் ஜோதிலெட்சுமி தலைமை வகித்தார். பொன்னமராவதி தாசில்தார் சாந்தா பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

பொது விருந்தில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தினர். இதில் திமுக தெற்கு ஒன்றியசசெயலர் அடைக்கலமணி, கோயில் செயல் அலுவலர் ஜெயா, ஆய்வாளர் லாவண்யா, தேர்தல் துணை தாசில்தார் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 

Tags : Konnaiyur Muthu Mariamman Temple ,Anna ,Ponnamaravathi ,Jyothilekshmi ,Joint Commissioner ,Hindu Religious and Endowments Department ,Thanjavur ,Tahsildar Shantha… ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்