×

இந்திய பொருள்கள் மீதான வரி 18%ஆக குறைக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம்

மும்பை: இந்திய பொருள்கள் மீதான வரி 18%ஆக குறைக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, ஏற்றுமதி உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் அதிகரித்து 83,739 புள்ளிகள் உயர்ந்தன. வர்த்தகம் தொடங்கியவுடன் 4,205 புள்ளிகள் அதிகரித்து 85,872 புள்ளிகள் தொட்டுவிட்டு இறுதியில் 2.5% உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது.

சென்செக்ஸ் நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ் பங்கு 9%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 6.7%, இண்டிகோ பங்கு 5.5% பவர் கிரிட் பங்கு 4.8% விலை உயர்ந்தன. சன் ஃபார்மா பங்கு 4.5%, பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு 4%, எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் பங்குகள் தலா 3.4% விலை அதிகரித்தன. . முன்னணி நிறுவனங்களில் ஐடிசி மட்டுமே சரிவைச் சந்தித்த ஒரே நிறுவனமாக இருந்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 639 புள்ளிகள் அதிகரித்து 25,728 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது பங்குச் சந்தைகளில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Tags : US ,President Trump ,Mumbai ,India ,
× RELATED சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன்...