×

மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை : மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் – மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஜவகர்நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மருத்துவ உதவி, திருமண உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது குறித்தும் தேர்தலை மனதில் வைத்துகூட சலுகைகள் அறிவிக்காதது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது; வேறு எந்த மாற்றமும் இல்லை. ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமோ, நிதியோ அறிவிக்கவில்லை. மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவோம். சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும்.காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே புதிய எதிரிகளுக்கு என்ன சொல்கிறீர்கள் எனும் கேள்விக்கு நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை, விமர்சிப்பவர்களையும் நண்பர்களாகவே பார்க்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Tags : Union BJP government ,Assembly elections ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,Chief Minister MLA ,MLA ,BJP government ,K. Stalin ,M.D. ,Blood Purification and Rehabilitation Centre ,Kolathur, Chennai ,
× RELATED பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்...