சென்னை: தவெக தலைவராக இருக்க விஜய்க்கு அருகதை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா? விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விஜய் எவ்வளவு வருமான வரி செலுத்தியுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. அப்படி என்றால் வரியும் குறைவு. அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டும்.தவெக கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது?. லாட்டரி பணத்தில் இருந்து தான் நடக்கிறது. கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி ஒரு குற்ற உணர்வு இல்லாமல் மூன்றாவது ஆண்டு கட்சி தொடக்க விழாவில் வந்து டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவிற்கு மனக் கஷ்டப்பட்டிருக்கும். போட்டியே திமுக vs அதிமுகதான்.. நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்.”இவ்வாறு தெரிவித்தார்.
