பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி!!

சென்னை : முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அங்கிருந்து, அண்ணா நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து, மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை சென்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Related Stories: