மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் அதிகரிப்பு!!

மும்பை: ஒன்றிய பட்ஜெட்டை அடுத்து பெரும் சரிவை கண்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் அதிகரித்து 81,666 புள்ளிகளானது. பவர் கிரீட் பங்கு 7.6%, அதானி போர்ட்ஸ் பங்கு 4.7%, டிசிஎல், ரிலையன்ஸ் பங்குகள் தலா 3% விலை உயர்ந்தன. எம்&எம் பங்கு 2.9%, எல்&டி பங்கு 2.8%, இண்டிகோ, அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் தலா 2% விலை அதிகரித்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., பஜாஜ் ஃபின்செர்வ், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 263 புள்ளிகள் அதிகரித்து 25,088 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Related Stories: