மும்பை : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முடித்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் மளமளவென சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தற்ப்போது சுமார் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
அனைத்து பங்குதாரர்களுக்கும் பங்குகளைத் திரும்ப வாங்குவது மூலதன ஆதாயமாக வரி விதிக்கப்படும்; ஃபியூச்சர்ஸ் மீதான STT 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மூலதனச் செலவை ரூ. 12 லட்சம் கோடியாக உயர்த்தியதால், எல்&டி, அதானி போர்ட்ஸ் நிறுவனங்கள் உள்கட்டமைப்புத் துறை ஏற்றத்திற்குத் தலைமை தாங்குகின்றன. வெளிநாட்டில் வசிக்கும் தனிநபர்களுக்கான முதலீட்டு வரம்பை 10% ஆக இரட்டிப்பாக்க நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். நிதியமைச்சரின் ரூ. 10,000 கோடி ‘பயோஃபார்மா சக்தி’ திட்டத்திற்குப் பிறகு பயோகான், சன் பார்மா பங்குகள் உயர்ந்துள்ளது.
பட்ஜெட்டில் புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜவுளிப் பங்குகள் விலை 9% வரை உயர்ந்துள்ளது. 2027 நிதியாண்டில் மின்னணு உற்பத்திக்கு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 40,000 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளதால், EMS பங்குகள் உயர்ந்துள்ளது.
வளர்ச்சி இணைப்புகளாக நகரங்களுக்கு இடையே 7 அதிவேக வழித்தடங்களை உருவாக்க நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் போர்ட்ஃபோலியோ திட்டம் மூலம் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்யலாம்
