நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத ஸ்கேன் மையம் இழப்பீடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!!

நெல்லை: நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத ஸ்கேன் மையம் இழப்பீடு தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயிற்று வலி காரணமாக சுனிதா என்பவர் தனியார் ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார். ஸ்கேன் அறிக்கையில் நோயின் தன்மையை முறையாக குறிப்பிடாததால் சிகிச்சை பெற தாமதம் என வழக்கு தொடர்ந்த நிலையில், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக மனுதாரருக்கு ரூ.25,000, வழக்கு செலவாக ரூ.10,000 என மொத்தம் ரூ.36,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: