தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை போடியில் உள்ள அலுவலகத்திற்கு ஓபிஎஸ் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்கள், அவரிடம், ‘`கூட்டணி குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன?’’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஓபிஎஸ், ‘`பொறுமையாக இருங்கள்; சொல்கிறேன்’’ என மழுப்பலாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தேர்தல் கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவு ஏதும் எடுக்க முடியாமல் இருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
