மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர் கைது

திண்டிவனம், ஜன. 8: திண்டிவனம் அடுத்த கோரக்கேணி பகுதியில் மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர். அதில் வந்த 2 பேர் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்து தெரியவந்தது. விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த சாலமேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(35), பிரகாஷ்(35) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: