×

ஒரு எம்பிகூட ஜெயிக்காமல் வாய்ச்சவடால் விடுவதா? அமித்ஷா மீது அமைச்சர் சாமிநாதன் அட்டாக்

 

மதுரை: ‘நாடாளுமன்றத் தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தார். ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் வெறும் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என அமைச்சர் மு.பெ.சமிநாதன் கூறினார். மதுரையில் அமைச்சர் சாமிநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் மோடி பொங்கல் விழா தேர்தலுக்காக நடந்த நாடகம். நாடாளுமன்றத் தேர்தலில் அதே அமித்ஷா தான் தமிழகம் வந்தார். ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. வெறும் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய, பெரிய ஜாம்பவான்கள் திமுகவை அழிக்க வேண்டும் என சொல்லி அழிந்து போயிருக்கிறார்கள்.

திமுகவை என்றைக்கும் அழிக்க முடியாது. மக்களோடு இணைந்தது திமுக. பொங்கல் பரிசு கொடுக்காவிட்டால் ஏன் கொடுக்கவில்லை என கேட்கிறார்கள். கொடுத்தால் ஒரு சாயம் பூசுகிறார்கள். பேசுபவர்களை பற்றி கவலை இல்லை. மக்களுக்கான பணிகளை தொடர்ந்து திமுக செய்யும். வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் பொறுப்பேற்பார். ஏழாவது முறையாக ஆட்சியில் திமுக அமரும். இவ்வாறு கூறினார்.

 

Tags : Minister ,Saminathan ,Amit Shah ,Madurai ,Tamil Nadu ,M.P. Saminathan ,Modi Pongal ,Trichy… ,
× RELATED சட்டத்தில் எந்த தடையும் இல்லாதபோது...