×

அதிகாரம் மட்டும் அல்ல; அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: மாணிக்கம் தாகூர்

சென்னை: அதிகாரம் மட்டும் அல்ல; அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல்.

தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.

அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Manikam Tagore ,Chennai ,Congress ,P ,IPDS ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு...