சென்னை: ‘தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 440 மி.மீ. மழை பொழியும் நிலையில் தற்போது வரை 427 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது’ என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கணக்கீடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் பருவமழை குறைவாக பெய்துள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது.
