×

புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு

சென்னை : புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள். மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி ஆகிய 10 புதிய நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tiruvannamalai ,Namakkal ,Pudukkottai ,Karaikudi ,Mamallapuram ,Sriperumbudur ,Thiruvaiyaru ,Polur ,Chengam ,Kanyakumari ,
× RELATED பெற்றோரை இழந்து தவிக்கும் 3...