×

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்குவரவுள்ள பராசக்தி பட கதை திருடப்பட்டது: உதவி இயக்குநர் ஐகோர்ட்டில் வழக்கு

 

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜனவரி 10ல் திரைக்குவரவுள்ள பராசக்தி பட கதை திருடப்பட்டது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கதை திருட்டு புகார் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் விசாரித்து ஜனவரி 2ல் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு. உதவி இயக்குநர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘பராசக்தி’. இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது “செம்மொழி” என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து எழுதிய கதைக்கருவை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளதாக ராஜேந்திரன் என்பவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2010ம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை தயாரிப்பாளர் சேலம் தனசேகரனிடம் கொடுத்ததாகவும், அதை நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனால் ‘பராசக்தி’ திரைப்படம் குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tags : Sivakarthikeyan ,Chennai ,Court ,Parasakthi ,High Court ,
× RELATED பொருநை அருங்காட்சியகத்திற்கு...