காதலை கைவிட்டதால் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை தோழிக்கு அனுப்பிய வாலிபர் கைது

திருவனந்தபுரம் : கேரளாவில் காதலை கைவிட்டதால் இளம்பெண்ணை பழி வாங்குவதற்காக அவருடைய ஆபாச புகைப்படங்களை காதலியின் தோழிக்கு அனுப்பி வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பாள் பகுதியை சேர்ந்தவர் முகம்மது சஹத் (19). செல்போன் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் 2 பேரும் நெருக்கமானார்கள். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சஹத், இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வாங்கியுள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் சஹத்துடன் இருந்த தொடர்பை துண்டித்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்தவர் தன்னுடைய காதலியின் ஆபாச புகைப்படம், வீடியோக்களை இளம்பெண்ணின் தோழிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து அறிந்த அந்த இளம்பெண், மானந்தவாடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சஹத்தை கைது செய்தனர். விசாரணையில் இவர் போலி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டது தெரியவந்தது. பழுது பார்ப்பதற்காக ஒருவர் கொடுத்த செல்போன் சிம்மில் இருந்து போலி இன்ஸ்டாகிராம் ஐடிகளை உருவாக்கியுள்ளார். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் மலப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: