புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒன்று அல்லது 2 பெண் குழந்தைகளை பெற்ற குடும்பங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை தரப்படுகிறது. ரூ.30 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என தரப்பட்ட ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: