×

நீளிரா விமர்சனம்…

கடந்த 1988களில் வட இலங்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதை இது. ‘நீளிரா’ என்பதற்கு ‘நீளமான இரவு’ என்று அர்த்தம். இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்று போராளிகளை ஒடுக்க முற்படுகிறது. அங்கு வசிக்கும் தமிழ் குடும்பத்தில், சித்து குமரேசனின் திருமணம் நடப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒருபுறம் இலங்கை ராணுவம் குறித்த பயம், மறுபுறம் போராளிகளுடன் நட்பு, அதோடு இந்திய அமைதிப்படையின் நடவடிக்கை.

மூன்றுக்கும் இடையிலான பரபரப்பில், திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா என்பது மீதி கதை. இந்திய அமைதிப்படை குழு தலைவராக இந்தி பேசும் நவீன் சந்திரா, கல்லுக்குள் ஈரம் இருப்பதை அடிக்கடி உணர்த்துகிறார். போராளிகள் குழு தலைவராக சனந்த், அவரை நம்பியிருக்கும் ரூபா கொடுவாயூர், குடும்பத்தலைவி கபிலா வேணு மற்றும் ‘கயல்’ வின்சென்ட், ஸ்வாதி கிருஷ்ணன், விது, நவயுகா குகராஜா, நமச்சிவாயம் தம்பி பிள்ளை, ரோஹித் கோகடே ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இரவு நேர காட்சிகளை செல்வரத்னம் பிரதீபன் கேமரா இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ளது. ‘கே’ பின்னணி இசை, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுதி இயக்கியுள்ள சோமிதரன், உண்மை சம்பவத்தை திரைக்கேற்ப மாற்றி வழங்கியுள்ளார். பல காட்சிகளில் தென்படும் நாடகத்தனத்தை கவனித்து களைந்திருக்கலாம்.

Tags : North Sri Lanka ,Sri Lanka ,Sidhu Kumaresan ,Indian Peace Forces ,Indian Peace Corps ,
× RELATED பிரபாஸ் அம்மாவாக நடிக்கும் ஜெயப்பிரதா