×
Saravana Stores

பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கோவை, அக்.24: கோவை செல்வபுரம் அருகே உள்ள காட்டன் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகள் ரேவதி (29). இவர் செட்டி வீதி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே சென்ற போது அவரது கழுத்தில் இருந்த 1 பவுன் நகை காணாமல் போனது. இது குறித்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

The post பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Cotton Chettiar Street ,Selvapuram, Coimbatore ,Revathi ,Chetty Road ,Avinasi Road ,Anna statue ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...