×
Saravana Stores

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. 4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம்? என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Court ,NCC ,Krishnagiri district ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED போலி என்சிசி முகாம் மூலம் பாலியல்...