×
Saravana Stores

தபால்கள் பட்டுவாடா செய்ய சிறப்பு ஏற்பாடு

கிருஷ்ணகிரி, அக்.10: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில், வருகிற 13ம் தேதி தபால்கள் சிறப்பு பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு விரைவு மற்றும் சாதாரண தபால்கள், வருகிற 13ம் தேதி கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் ஒரு தலைமை தபால் அலுவலகம் மற்றும் 34 துணை அஞ்சலகங்கள் வாயிலாக பட்டுவாடா செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள், கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தின் சார்பாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post தபால்கள் பட்டுவாடா செய்ய சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri Postal Division ,Superintendent ,Raghavendran ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!