×
Saravana Stores

ஸ்பா மையத்தில் விபசாரம் கர்நாடக பெண் கைது 3 இளம்பெண்கள் மீட்பு

ஓசூர், அக்.15: ஓசூரில் ஸ்பா மையத்தில் விபசாரம் நடத்தி வந்த கர்நாடக மாநில பெண்ணை, போலீசார் கைது செய்து, 3 இளம்பெண்களை மீட்டு சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஓசூர்-தளி ரோடு பாளையம் பகுதியில், அடுக்குமாடி கடைகள் உள்ளது. இக்கடை ஒன்றில் ஸ்பா என்ற மையம் இயங்கி வந்தது. இந்த மையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார்இ அந்த மையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 3 இளம் பெண்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களை மீட்டு சேலம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மையத்தை நடத்தி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரு, மடிவாளத்தைச் சேர்ந்த தனலட்சுமி (44) என்பவரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஸ்பா மையத்தில் விபசாரம் கர்நாடக பெண் கைது 3 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Salem ,Hosur-Thali Road Palayam ,Dinakaran ,
× RELATED ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்