×

நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி: 5 பேர் காயம்

திருப்பூர்; திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். சத்யா காலனியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கார்த்தி வீட்டில் திடீரென அதிக சப்தத்துடன் வெடிசத்தம் கேட்டுள்ளது; வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் கார்த்தியின் வீடு சேதம், எதிரில் இருந்த 5-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

The post நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி: 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Pandian Nagar ,Satya Colony ,Karti ,Karthi ,Bomb Blast ,
× RELATED திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில்...