×

பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!

பீகார்: பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், முசாஃபர்பூர் பகுதியில் வெள்ளத்தில் இறங்கியது. வெள்ளத்தில் சிக்கியோருக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் கீழே இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் 2 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கிய நிலையிலும் அதில் இருந்த பொருட்களை மக்கள் படகு மூலம் அள்ளிச் சென்றனர்.

The post பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Muzaffarpur ,Sikhiori ,Dinakaran ,
× RELATED பீகாரில் வெள்ளத்தில் கோளாறு காரணமாக...