×

ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிக்க காந்தி ஒப்புதல் தந்திருப்பாரா?: காந்தி உறவினரின் கருத்துக்கு ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: காந்தி தற்போது இருந்திருந்தால் ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிக்க ஒப்புதல் தந்திருப்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். விருப்பம் இல்லாத மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்க காந்தி ஒப்புதல் தந்திருப்பாரா?. காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக குறைக்க காந்தி சம்மதித்திருப்பாரா?. காந்தி இருந்திருந்தால் மோடி அரசை ஆதரித்திருப்பார் என்ற காந்தி உறவினரின் கருத்துக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

The post ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிக்க காந்தி ஒப்புதல் தந்திருப்பாரா?: காந்தி உறவினரின் கருத்துக்கு ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Gandhi ,chidambaram ,Delhi ,Kashmir ,
× RELATED அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்