×

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு

இம்பால்: மணிப்பூரில் ஜிர்பாம் மாவட்டத்தில் மலை மற்றும் அடர்ந்த காடுகளில் இருந்து மோங்கபங் மெய்டெய் கிராமத்தின் மீது ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு கிராமத்தில் இருந்த தன்னார்வலர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இதனிடையே காங்கோக்பி மாவட்டத்தில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூரத்சந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் குக்சி சோ குழுக்கள் சார்பில் நேற்று முன்தினம் தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : Manipur ,IMBAL ,MONGABANG MAIDAI ,FORESTS ,GIRBAM DISTRICT ,Revolt ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதம், வெடிமருந்து பறிமுதல்