போபால்: 40 வயது நபருடன் நடந்த திருமணத்தில் விருப்பமில்லாத 19 வயது இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்து வாழ மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனைவியை கடத்திச் சென்றதாக கணவர் வழக்கு தொடர்ந்த நிலையில், 21 வயது வித்தியாசம் உள்ளவருடன் வாழ விருப்பமில்லை என இளம்பெண் கூறியதால், ‘மேஜர்’ பெண் தனது துணையைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
